டி.என்.பி.எஸ்.சி., புது நடைமுறை தேர்வு பொறுப்பாளர்களுக்கு பயிற்சி
சேலம், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள புது நடைமுறைகள் தொடர்பாக, தேர்வு பொறுப்பாளர்களுக்கு பயிற்சி, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.
இதுகுறித்து கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது:
தேர்வாணைய புது நடைமுறைப்படி, ஓ.எம்.ஆர்., விடைத்தாளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாறுதல், முதன்மை கண்காணிப்பாளர், அறை கண்காணிப்பாளருக்கான வழிமுறைகள், தேர்வாணைய மென்பொருளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாறுதல் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. தேர்வாணையம் சார்பில், வரும், 15ல் நடக்க உள்ள குரூப் 1 தேர்வை, சேலம் மாவட்டத்தில், 14,291 பேர் எழுத உள்ளனர். அதற்கு, சேலம் பகுதியில், 49 மையம், ஆத்துார் வட்டாரத்தில், 5 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஜூலை, 12ல், குரூப் - 4 தேர்வு, சேலம் மாவட்டத்தில், 14 வட்டத்தில், 286 மையங்களில் நடக்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
டி.ஆர்.ஓ., ரவிக்குமார், தேர்வாணைய பிரிவு அலுவலர் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு மகிழ்ச்சி; நல்ல செய்தி வரும் என்கிறார் ஜி.கே.மணி!
-
குடிநீர் வாரியத்தில் நவீன மஸ்டர் ரோல் ஊழல்; ரூ.90 கோடி அபேஸ்; விசாரணை கோரும் அன்புமணி
-
3 வயது சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
ஜூன் 11ல் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கணிப்பு
-
கூலி தொழிலாளி உடல் பீஹாருக்கு போனது; டாக்டர் இடமாற்றம்
-
ராஜ்யசபா தேர்தல்; முதல்வர் முன்னிலையில் கமல், தி.மு.க., வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்