டி.என்.பி.எஸ்.சி., புது நடைமுறை தேர்வு பொறுப்பாளர்களுக்கு பயிற்சி


சேலம், டி.என்.பி.எஸ்.சி., தேர்வுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள புது நடைமுறைகள் தொடர்பாக, தேர்வு பொறுப்பாளர்களுக்கு பயிற்சி, சேலம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

இதுகுறித்து கலெக்டர் பிருந்தாதேவி கூறியதாவது:

தேர்வாணைய புது நடைமுறைப்படி, ஓ.எம்.ஆர்., விடைத்தாளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாறுதல், முதன்மை கண்காணிப்பாளர், அறை கண்காணிப்பாளருக்கான வழிமுறைகள், தேர்வாணைய மென்பொருளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாறுதல் பற்றி விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. தேர்வாணையம் சார்பில், வரும், 15ல் நடக்க உள்ள குரூப் 1 தேர்வை, சேலம் மாவட்டத்தில், 14,291 பேர் எழுத உள்ளனர். அதற்கு, சேலம் பகுதியில், 49 மையம், ஆத்துார் வட்டாரத்தில், 5 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஜூலை, 12ல், குரூப் - 4 தேர்வு, சேலம் மாவட்டத்தில், 14 வட்டத்தில், 286 மையங்களில் நடக்க உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
டி.ஆர்.ஓ., ரவிக்குமார், தேர்வாணைய பிரிவு அலுவலர் செந்தில்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement