இணைப்பு சாலையில் திடீர் பள்ளங்கள் சிப்காட் வரும் வாகனங்கள் தடுமாற்றம்

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி சிப்காட் வளாகத்தில், 220க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு, தினமும் நுாற்றுக்கணக்கான கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. கனரக வாகனங்கள் அனைத்தும், தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலை வழியாக சிப்காட் பிரதான சாலை மற்றும் ஏ.ஆர்.எஸ்., சிப்காட் சாலைக்கு செல்ல வேண்டும்.
பிரதான சாலை மற்றும் ஏ.ஆர்.எஸ்., சாலைக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலையில், ஏராளமான இடங்களில் திடீர் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன.
கடந்த வாரம் பெய்த மழையின் போது, சாலையில் தண்ணீர் தேங்கி, தற்போது பள்ளமாக மாறியுள்ளது. இதனால், இரவு நேரத்தில் வரும் கனரக வாகனங்கள், திடீர் பள்ளங்களால் திக்குமுக்காடி போகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
எனவே, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் துரிதமாக செயல்பட்டு, உடனடியாக பள்ளங்களை சமன்செய்து, பாதுகாப்பான வாகன போக்குவரத்தை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும்
-
தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் ஒருவர் பலி: கர்ப்பிணிகள் மாஸ்க் அணிய அறிவுறுத்தல்
-
பாகிஸ்தான் மனிதகுலத்திற்கு எதிரானது: காஷ்மீரில் பிரதமர் மோடி பேச்சு
-
ராமதாஸ் - அன்புமணி சந்திப்பு மகிழ்ச்சி; நல்ல செய்தி வரும் என்கிறார் ஜி.கே.மணி!
-
குடிநீர் வாரியத்தில் நவீன மஸ்டர் ரோல் ஊழல்; ரூ.90 கோடி அபேஸ்; விசாரணை கோரும் அன்புமணி
-
3 வயது சிறுமிக்கு வன்கொடுமை; குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை
-
ஜூன் 11ல் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் கணிப்பு