எல்லையம்மன் கோவில் தெரு வடிகால்வாய் பணிக்காக மூடல்

மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம் மண்டலத்தில், 2021ல் பெய்த கனமழையின் போது வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டது. இதை தடுக்க, மண்டலத்தின் 16 வார்டுகளில் 180 கோடி ரூபாயில் மழைநீர் வடிகால்வாய் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
அடுத்தடுத்த மழைக்காலம், நிதி ஒதுக்குவதில் தாமதம் உள்ளிட்டவற்றால் தடைபட்ட பணிகள், தற்போது மீண்டும் நடந்து வருகின்றன.
அதன்படி, மேற்கு மாம்பலம், 140வது வார்டு எல்லையம்மன் கோவில் தெருவில், 1.60 கோடி ரூபாய் செலவில், 455 மீட்டர் துாரத்திற்கு மழைநீர் வடிகால்வாய் அமைத்து, அதை ரெட்டிகுப்பத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரதான கால்வாயில் இணைக்கும் பணி நடந்து வருகிறது.
இந்த பணிக்காக, எல்லையம்மன் கோவில் தெரு மற்றும் கோவிந்தன் சாலை சந்திப்பு அருகே, பள்ளம் தோண்டப்பட்டுள்ளது. இதனால், இவ்வழியே வாகனங்கள் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, அசோக் நகர், கே.கே., நகரில் இருந்து கோவிந்தன் சாலை, எல்லையம்மன் கோவில் தெரு வழியாக தி.நகர் செல்லும் வாகனங்கள், கோதண்டராமர் கோவில் தெரு வழியாக செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
வாகன ஓட்டிகள், பகுதிவாசிகள் கூறியதாவது:
அசோக் நகரில் இருந்து தி.நகர் செல்ல, எல்லையம்மன் கோவில் தெருவை அதிகம் பயன்படுத்தி வந்தோம். தற்போது, மழைக்காலத்தில் இச்சாலையின் குறுக்கே மழைநீர் வடிகால்வாய் அமைக்க, பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
ஒரு மாதத்தில் பணி முடிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அதற்குள் முடிக்கவில்லை என்றால், மழைக்காலத்தில் சகதியாக மாறி, பெரிதும் சிரமம் ஏற்படும். பணியை விரைந்து முடிக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மேலும்
-
அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு எதற்கு? மவுனம் கலைத்தார் ராமதாஸ்
-
நூலிழையில் உயிர் தப்பிய தேஜஸ்வி: பாதுகாப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளான லாரி
-
பயங்கரவாதத்தை ஒழிக்க துணை நிற்போம்: இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம் அமெரிக்கா உறுதி
-
நாடு முழுவதும் 5,364 கொரோனா நோயாளிகள்: கேரளா, மே.வங்கம், டில்லியில் அதிக பாதிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைவு; ஒரு சவரன் ரூ.71,840!
-
சுசி ஈமு ரூ.7.61 கோடி மோசடி வழக்கு; நிர்வாக இயக்குனருக்கு 10 ஆண்டு சிறை