அரவக்குறிச்சி அரசு கல்லுாரியில் இன்று கலந்தாய்வு துவக்கம்



அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு, இன்று (6ம் தேதி) கலந்தாய்வு நடக்கிறது.

அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், இளங்கலை தமிழ் (பி.ஏ., தமிழ்) மற்றும் இளங்கலை ஆங்கிலம் (பி.ஏ., ஆங்கிலம்), இளம் அறிவியல் கணிதம் (பி.எஸ்.சி., கணிதம்) மற்றும் கணினி அறிவியல், வணிகவியல் (பி.காம்.,) ஆகிய பாடப்பிரிவுகள் கற்பிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இன்று முதல் கல்லுாரியில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது என, கல்லுாரி முதல்வர் வசந்தி தெரிவித்துள்ளார்.

Advertisement