லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார் விற்பனை மும்முரம்


கிருஷ்ணராயபுரம், லாலாப்பேட்டை, வாழைக்காய் மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை நடந்தது.

கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பிள்ளபாளையம், வல்லம், கொம்பாடிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமரான்பட்டி, கருப்பத்துார், கள்ளப்பள்ளி, மகாதானபுரம், பொய்கைப்புத்துார் பகுதிகளில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகின்றனர்.

வாழைத்தார்கள் அறுவடை செய்து லாலாப்பேட்டை வாழைக்காய் ஏலம் கமிஷன் மண்டிக்கு கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். நேற்று பூவன் வாழைத்தார் ஒன்று, 300 ரூபாய், ரஸ்தாளி வாழைத்தார், 400 ரூபாய், கற்பூரவள்ளி வாழைத்தார், 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

Advertisement