உலக சுற்றுச்சூழல் தினத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில், உலக சுற்றுச்சூழல் தின கொண்டாட்டம் நடந்தது.

மருத்துவமனை, சுகாதார பணிகள் இணை இயக்குநர் மருத்துவர் ஹிலாரினா ஜோஷிகா நளினி தலைமை வகித்தார். மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

இதில், செவிலியர் கண்காணிப்பாளர், செவிலியர் பயிற்சி பள்ளி மாணவ - மாணவியர், பிளாஸ்டிக் பயன்படுத்துவதால், மனிதர்களுக்கும், விலங்குகளுக்கும், நீர்நிலையில் வாழும் உயிரினங்களுக்கும் ஏற்படும் பாதிப்பு குறித்த வரைபடம் மற்றும் வாசகங்களுடன் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தொடர்ந்து, மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. செவிலியர் மாணவ - மாணவியருக்கு சுற்றுச்சூழல் தொடர்பாக பேச்சு, ஓவியம், கவிதை, கட்டுரை போட்டி நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement