வர்ணம் பூசாத வேகத்தடையால் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ஸ்ரீபெரும்புதுார்:ஸ்ரீபெரும்புதுார் -- குன்றத்துார் சாலையில் தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஸ்ரீபெரும்புதுார், பிள்ளைபாக்கம் உள்ளிட்ட சிப்காட் தொழில்பூங்காகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் ஊழியர்கள் பல்வேறு வாகனங்களில் சென்று வருகின்றனர்.
இந்த சாலையில், பிள்ளைபாக்கம சந்திப்பில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடையின் மீது வெள்ளை நிற வர்ணம் பூசாமலும், ஒளி பிரதிபலிப்பான் அமைக்கப்படாமல் உள்ளது.
இதனால், வாகன ஓட்டிகள், வேகத்தடை இருப்பது தெரியாமல், அதில் ஏறி இறங்கி நிலைத் தடுமாறி விழுந்து காயமடைந்து வருகின்றனர்.
எனவே, வேகத்தடை மீது வெள்ளை நிற வர்ணம் பூசி, ஒளி பிரதிபலிப்பான் அமைக்க, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு எதற்கு? மவுனம் கலைத்தார் ராமதாஸ்
-
நூலிழையில் உயிர் தப்பிய தேஜஸ்வி: பாதுகாப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளான லாரி
-
பயங்கரவாதத்தை ஒழிக்க துணை நிற்போம்: இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம் அமெரிக்கா உறுதி
-
நாடு முழுவதும் 5,364 கொரோனா நோயாளிகள்: கேரளா, மே.வங்கம், டில்லியில் அதிக பாதிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைவு; ஒரு சவரன் ரூ.71,840!
-
சுசி ஈமு ரூ.7.61 கோடி மோசடி வழக்கு; நிர்வாக இயக்குனருக்கு 10 ஆண்டு சிறை
Advertisement
Advertisement