இடப் பிரச்னையால் கிடப்பில் சுரங்கப்பாதை--

ராஜபாளையம்: ராஜபாளையம் ரயில் நிலையத்தில் அம்ரித் ஸ்டேஷன் திட்டத்தில் ரூ.11.70 கோடி மதிப்பில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகளை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீ வத்ஸவா நேற்று மாலை ஆய்வு செய்தார்.

செய்தியாளர்களிடம் கூறுகையில், ரயில்வே சார்பில் சுரங்கப்பாதை பணிகள் முடிந்துவிட்டது. இவ் விஷயத்தில் மாநில அரசின் இடப்பிரச்சனை காரணமாக கிடப்பில் உள்ளது. ராஜபாளையம் ரயில்வே ஸ்டேஷன் முதல் நடைமேடை போதிய அகலம் இல்லாததால் மலையடிப்பட்டி ரோடு வரை நீட்டிக்க முடியவில்லை. இரண்டாவது பிளாட்பார்ம் மேற்கூரை பணிகள் விரைவில் தொடங்கப்படும். பார்க்கிங் பணிகள் முடிந்துள்ளதால் ஒவ்வொன்றாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார்.

Advertisement