வேலை உறுதி திட்ட நிதி இழுபறி
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் வேலை உறுதி திட்ட நிதி மூலம் பணி செய்த ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.82 கோடி விடுவிக்கப்படாமல் இழுத்தடித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ( 2024 --- 2025) பேவர், தார், சிமென்ட் சாலைகள், குடிநீர் தொட்டி கட்டுதல், கண்மாய் துார்வாருதல், மடை கட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்றது. இதில், வேலை உறுதி திட்ட பணிகளில் ஈடுபட்ட ஊழியர்களுக்கு அவரரவர் வங்கி கணக்குகளில் சம்பள தொகை வரவு வைக்கப்பட்டுள்ளன.
2024- -2025 ம் ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் பல்வேறு கட்டுமான பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர்களுக்கான நிதியை அரசு விடுவிக்காமல் இழுத்தடித்து வருகிறது. நிதியின்றி மாவட்ட அளவில் ஒப்பந்ததாரர்கள், அடுத்த கட்ட அரசு பணிகளை எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். தமிழக அரசு, வேலை உறுதி திட்ட நிதி ரூ.4000 கோடியை மத்திய அரசு விடுவிக்கவில்லை என்று புகார் தெரிவித்தனர்.
ஆனால், முதற்கட்டமாக ரூ.2999 கோடியை மத்திய அரசு கடந்த சில நாட்களுக்கு முன் விடுவித்தது. மத்திய அரசு நிதி ஒதுக்கிய பின்னராவது, மாநில அரசு ஒப்பந்ததாரர்களுக்கு நிதியை வழங்கும் என எதிர்பார்த்தனர். ஆனால், தொடர்ந்து மாநில அரசு, வேலை உறுதி திட்ட பணிகளை செய்த ஒப்பந்ததாரர்களுக்கு தளவாட சாமான்களுக்கான தொகையை விடுவிக்காமல் இழுத்தடிப்பதாக புகார் எழுந்துள்ளது.
அரசு விரைவில் விடுவிக்கும்
ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி கூறியதாவது: தமிழக அளவில் தேசிய வேலை உறுதி திட்ட பணி நிதியை மாவட்டங்களுக்கு அரசு விடுவிக்கவில்லை. சிவகங்கைக்கு மட்டுமே ரூ.82 கோடி விடுவிக்க வேண்டும். தற்போது தான் கடந்த ஆண்டில் பணி செய்த ஒப்பந்ததாரர்களின் பணி பட்டியலை அனுப்பியுள்ளோம். விரைவில் அத்தொகையை அரசு விடுவிக்கும் என்றார்.
மேலும்
-
அன்புமணி, ஆடிட்டர் குருமூர்த்தி சந்திப்பு எதற்கு? மவுனம் கலைத்தார் ராமதாஸ்
-
நூலிழையில் உயிர் தப்பிய தேஜஸ்வி: பாதுகாப்பு வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளான லாரி
-
பயங்கரவாதத்தை ஒழிக்க துணை நிற்போம்: இந்திய எம்.பி.,க்கள் குழுவிடம் அமெரிக்கா உறுதி
-
நாடு முழுவதும் 5,364 கொரோனா நோயாளிகள்: கேரளா, மே.வங்கம், டில்லியில் அதிக பாதிப்பு
-
ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைவு; ஒரு சவரன் ரூ.71,840!
-
சுசி ஈமு ரூ.7.61 கோடி மோசடி வழக்கு; நிர்வாக இயக்குனருக்கு 10 ஆண்டு சிறை