பெருமாள் ஹனுமந்த வாகனத்தில் வீதி உலா 

விழுப்புரம்; விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில், ஹனுமந்த வாகனத் தில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

விழுப்புரம் ஜனகவல்லி நாயகி சமேத வைகுண்டவாச பெருமாள் கோவிலில், கடந்த 2ம் தேதி பிரம் மோற்சவ விழா துவங்கியது.

தொடர்ந்து 3ம் தேதி அம்ஸ வாகனத்திலும், 4ம் தேதி சிம்ம வாகனத்திலும், நேற்று ஹனுமந்த வாகனத்திலும் சுவாமி வீதியுலா நடைபெற்றது.

இதையடுத்து 9ம் தேதி, சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவமும், 11ம் தேதி காலை தேரோட்டமும் நடக்கிறது.

Advertisement