திம்பம் மலைப்பாதையில் திரும்ப முடியாத லாரி



சத்தியமங்கலம், கர்நாடக மாநிலம் பெங்களூரிலிருந்து, திம்பம் மலைப்பாதை வழியாக கோவைக்கு ஒரு கண்டெய்னர் லாரி நேற்று மதியம் வந்தது.


ஒன்பதாவது கொண்டை ஊசி வளைவில் திரும்ப முடியாமல் நின்றது. இதனால் ஒருமணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் இரு புறங்களிலும் ஏராளமான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் இரவு, 8:00 மணியை கடந்தும் வாகனங்கள் ஊர்ந்தபடி சென்றன.

Advertisement