காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம்

காட்டுமன்னார்கோவில் : வீரசோழபுரம் கிராமத்தில் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

காட்டுமன்னார்கோவில் அடுத்த வீரசோழபுரம் கிராமம் விசாலாட்சி சமேத காசி விஸ்வநாதர் மற்றும் அய்யனார் கோவில் கும்பாபிேஷகத்தையொட்டி கடந்த 6ம் தேதி காலை கணபதி ஹோமம், முதல் கால யாக சாலை பூஜைகள் நடந்தது.

நேற்று காலை கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை, நான்காம் கால யாக பூஜைகள் மற்றும் மகா பூர்ணாஹூதி நடந்தது. தொடர்ந்து கடம் புறப்பாடு நடந்தது. சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கலசங்களை சுமந்து கோவிலை வலம் வந்து வேத மந்திரங்கள் முழங்க விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர். ஏற்பாடுகளை சந்திரசேகர சிவாச்சாரியார் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.

Advertisement