வேளாண் வளர்ச்சி விழிப்புணர்வு கூட்டம்
சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த வெய்யலுார் அரசு உயர்நிலைப்பள்ளியில் வேளாண் வளர்ச்சிக்கான விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
கடலுார் வேளாண் இணை இயக்குனர் லட்சுமி காந்தன் தலைமை தாங்கினார். வேளாண் உதவி இயக்குனர் அமிர்தராஜ், சென்னை மத்திய உவர்நீர் மீன் வளர்ப்பு நிலைய முதன்மை விஞ்ஞானி எழில் பிரவினா, மூத்த விஞ்ஞானி அரித்திரா பெரா, வேளாண் அறிவியல் நிலைய பேராசிரியர் காயத்ரி, மேலாளர் ரமேஷ், உதவி மேலாளர் கார்த்திக் மணி, இப்கோ நிறுவன கண்காணிப்பாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், காரீப் பருவத்தில் நேரடி நெல் விதைப்பு, இயந்திர நடவிற்கான மானியம், உளுந்து விதை உற்பத்தி, சவுக்கு சாகுபடி, ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்தல் குறித்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேனிலவுக்கு சென்ற இடத்தில் புது மாப்பிள்ளை கொலை: புது மணப்பெண் உட்பட 4 பேர் கைது
-
வார தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 சரிவு; ஒரு சவரன் ரூ.71,640!
-
காசாவுக்கு சென்ற கப்பலை சிறைபிடித்த இஸ்ரேல்: மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைது
-
பாகிஸ்தான் கழுதைக்கு 'டிமாண்ட்' ரூ.2 லட்சமாக விலை உயர்வு
-
அதிகாலை பயணத்தால் தொடரும் விபரீதம்; நெடுஞ்சாலையில் கார்- வேன் மோதி 12 வயது சிறுமி உட்பட 2 பேர் பலி
-
ஹமாஸ் தலைவன் முகமது சின்வாரை கொன்றது இப்படிதான்: இஸ்ரேல் தகவல்!
Advertisement
Advertisement