மின்னல் தாக்கி 2 ஸ்கூட்டி தீயில் கருகி சேதமானது

கடலுார்: கடலுாரில் நேற்று இரவு பெய்த கனமழையில் மின்னல் தாக்கி இரண்டு ஸ்கூட்டிகள் தீக்கிரையானது.
கடலுாரில் நேற்று இரவு இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. அதில் கடலுார் செம்மண்டலம் சுப்பையா நகரைச்சேர்ந்த சரவணன்,41, என்பவரது வீட்டில் மின்னல் தாக்கியது.
இதில் வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த இரண்டு 2 ஸ்கூட்டிகள் தீபிடித்து எரிந்து சாம்பலானது. மேலும் வீட்டின் முன்புறம் தீயால் பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த கடலுார் தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்து மேலும் பரவாமல் தடுத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி
-
தினமலர் இல்ல திருமண விழா !
-
தேனிலவுக்கு சென்ற இடத்தில் புது மாப்பிள்ளை கொலை: புது மணப்பெண் உட்பட 4 பேர் கைது
-
வார தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 சரிவு; ஒரு சவரன் ரூ.71,640!
-
காசாவுக்கு சென்ற கப்பலை சிறைபிடித்த இஸ்ரேல்: மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைது
-
பாகிஸ்தான் கழுதைக்கு 'டிமாண்ட்' ரூ.2 லட்சமாக விலை உயர்வு
Advertisement
Advertisement