சூலுாரில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி

கோவை; சூலுார் பகுதியில் டிரான்ஸ்பார்மரில் 'பியூஸ்' சரி செய்ய முயன்ற விவசாயி, மின்சாரம் தாக்கி பலியானார்.

சூலுார் மலைப்பாளையம், ஜல்லி தோட்டத்தை சேர்ந்தவர் ராக்கியப்பன் மகன் பாலசுப்ரமணியம் 34; நேற்று மதியம், இவரது தோட்டத்தில் உள்ள கிணற்று மோட்டார் வேலை செய்யாததால், பாலசுப்ரமணியம், ராக்கியப்பன், மோட்டாரை பரிசோதித்தனர். மோட் டாருக்கு மின்சாரம் வரும் டிரான்ஸ்பார்மரில் 'பியூஸ்' போனது தெரியவந்தது.

மலைப்பாளையம், அடப்புக்காடு பகுதியில் உள்ள டிரான்ஸ்பார்மரில் பியூஸ் மாட்ட, பாலசுப்ரமணியம் முயன்றார். அப்போது, அவர் மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார். இங்கிருந்தவர்கள் இவரை மீட்டு, கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனை கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர், உயிரிழந்ததாக தெரிவித்தார். சுல்தான்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement