தேரோட்டத்தில் மயங்கிய பி.எஸ்.எப்., வீரர் மரணம்

தஞ்சாவூர்; தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு யானைக்கால் தெருவை சேர்ந்த ரமேஷ், 57; குஜராத் மாநிலத்தில் 84வது பட்டாலியனில் பி.எஸ்.எப்., வீரராக பணியாற்றி வந்தார். விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்த ரமேஷ், ஒரத்தநாட்டில் உள்ள விசாலாட்சியம்மன் சமேத காசி விஸ்வநாதர் கோவில் வைகாசி விசாக தேரோட்டத்தில் நேற்று பங்கேற்று வழி நடத்தினார்.
கோமுட்டி தெரு பகுதியில் தேருடன் சென்று கொண்டிருந்த ரமேஷ் திடீரென மயங்கி விழுந்தார். அங்கிருந்தவர்கள், ரமேஷை ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்த விட்டதாக தெரிவித்தனர். வெயில் தாக்கத்தால் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு இறந்ததாக கூறினர்.
ரமேஷுக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நாய்களை தெருக்களில் வாக்கிங் அழைத்து வர தடை ; ஈரான் அரசு
-
சத்தீஸ்கரில் பயங்கர குண்டுவெடிப்பு: ஏ.எஸ்.பி., உயிரிழப்பு; தீவிர விசாரணை!
-
புலிகள் காப்பகத்தில் மரங்கள் வெட்டி கடத்தல்; வன ஆர்வலர்கள் அதிர்ச்சி!
-
மஹா.,வில் ரயிலில் இருந்து தவறி விழுந்து 5 பேர் பலி; கூட்ட நெரிசலால் நிகழ்ந்த சோகம்!
-
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 6,491 ஆக உயர்வு; 24 மணி நேரத்தில் கேரளாவில் 143 பேருக்கு உறுதி
-
நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி
Advertisement
Advertisement