மஹா.,வில் ரயிலில் இருந்து தவறி விழுந்து 5 பேர் பலி; கூட்ட நெரிசலால் நிகழ்ந்த சோகம்!

மும்பை: தானேவில் புறநகர் ரயிலில் இருந்து தவறி விழுந்து பயணிகள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக நிகழ்ந்துள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை அடுத்த தானேவில் ரயிலில் இருந்து தவறி தண்டவாளத்தில் பயணிகள் விழுந்தனர். இந்த விபத்தில் பயணிகள் 5 பேர் உயிரிழந்தனர். ரயிலில் கூட்ட நெரிசல் காரணமாக, தொங்கியபடி பயணம் செய்தவர்கள் தண்டவாளத்தில் கீழே விழுந்து உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும் 10க்கும் மேற்பட்டோர் தண்டவாளத்தில் தவறி விழுந்து காயம் அடைந்து உள்ளனர். விபத்தில் காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பயணிகள் உயிரிழந்த சம்பவத்தால் உள்ளூர் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. புறநகர் மின்சார ரயிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டதற்கான காரணம் குறித்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து (5)
தமிழன் - Chennai,இந்தியா
09 ஜூன்,2025 - 14:05 Report Abuse

0
0
Reply
RAAJ68 - ,
09 ஜூன்,2025 - 12:29 Report Abuse

0
0
Reply
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
09 ஜூன்,2025 - 11:53 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
09 ஜூன்,2025 - 11:35 Report Abuse

0
0
Reply
Shankar - Hawally,இந்தியா
09 ஜூன்,2025 - 11:22 Report Abuse

0
0
Reply
மேலும்
-
கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சரக்கு கப்பலில் தீ விபத்து; 4 பேர் மாயம்
-
கோவை, நீலகிரிக்கு 3 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; இன்று 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
-
மேட்டூர் அணையில் ஜூன் 12ல் தண்ணீர் திறப்பு; இன்றைய நிலவரம் இதோ!
-
த.வெ.க.,வுடன் கூட்டணியா? பிரேமலதா சொன்ன பதில்
-
ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ்., அதிகாரி அருண்ராஜ் த.வெ.க.,வில் ஐக்கியம்
-
2026ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்தே தீரும்; ராமதாஸ் உறுதி
Advertisement
Advertisement