யானை தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு

பந்தலுார்; பந்தலுார் அருகே யானை தாக்கியதில், முதியவர் பலியானார்.
பந்தலுார் அருகே உள்ளது சந்தக்குன்னு கிராமம். நேற்றிரவு, இப்பகுதியை சேர்ந்த ஜோய் 60, அருகிலுள்ள காபி தோட்டம் வழியாக, வீட்டுக்கு சென்றுக் கொண்டிருந்தார்.
அப்போது, கொம்பன் யானை தாக்கியதில் படுகாயமடைந்த இவரை, வனத்துறையினர் மீட்டு, பந்தலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனை செய்த டாக்டர், பலியானதாக தெரிவித்துள்ளார்.
வனத்துறையினர், யானையை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இவருக்கு சோசம்மா என்ற மனைவியும், அலன் 18, அலீனா 17 ஆகிய குழந்தைகளும் உள்ளனர். மருத்துவமனை மற்றும் பிதர்காடு பகுதியில், போலீசார் மற்றும் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தினமலர் இல்ல திருமண விழா !
-
தேனிலவுக்கு சென்ற இடத்தில் புது மாப்பிள்ளை கொலை: புது மணப்பெண் உட்பட 4 பேர் கைது
-
வார தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 சரிவு; ஒரு சவரன் ரூ.71,640!
-
காசாவுக்கு சென்ற கப்பலை சிறைபிடித்த இஸ்ரேல்: மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைது
-
பாகிஸ்தான் கழுதைக்கு 'டிமாண்ட்' ரூ.2 லட்சமாக விலை உயர்வு
-
அதிகாலை பயணத்தால் தொடரும் விபரீதம்; நெடுஞ்சாலையில் கார்- வேன் மோதி 12 வயது சிறுமி உட்பட 2 பேர் பலி
Advertisement
Advertisement