காங்கிரஸ் வேட்பாளர் மீது கவர்னரிடம் ம.ஜ.த., புகார்

பெங்களூரு : கர்நாடக மேல்சபையில் காலியாக உள்ள நான்கு இடங்களுக்கு, ஆர்த்தி ஷெட்டி, தினேஷ் அமீன் மட்டு, சாகர், ரமேஷ் பாபு ஆகியோரை நியமிக்கும்படி, கவர்னர் தாவர்சந்த் கெலாட்டுக்கு முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு பரிந்துரைத்தது.
இந்நிலையில், மாநில காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் ரமேஷ் பாபுவை, எம்.எல்.சி.,யாக நியமிக்கக் கூடாதென கவர்னரிடம் ம.ஜ.த., புகார் அளித்துள்ளது.
இதுகுறித்து, ம.ஜ.த., வெளியிட்டுள்ள அறிக்கை:
குற்ற பின்னணி உடைய ரமேஷ் பாபுவின் பெயரை மேல்சபை உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைத்தது சரியா? அவர் மீது பல குற்ற வழக்குகள் நீதிமன்றங்களில் உள்ளன.
போலி ஆவணங்கள் தயாரித்து நில மோசடிகளில் ஈடுபட்டு உள்ளார். அவரை மேல்சபைக்கு பரிந்துரை செய்ததில் காங்கிரசுக்கு என்ன பெருமை. அவர் எம்.எல்.சி., ஆக கூடாது என்பதற்காக கவர்னரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும்
-
நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி
-
தினமலர் இல்ல திருமண விழா !
-
தேனிலவுக்கு சென்ற இடத்தில் புது மாப்பிள்ளை கொலை: புது மணப்பெண் உட்பட 4 பேர் கைது
-
வார தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 சரிவு; ஒரு சவரன் ரூ.71,640!
-
காசாவுக்கு சென்ற கப்பலை சிறைபிடித்த இஸ்ரேல்: மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைது
-
பாகிஸ்தான் கழுதைக்கு 'டிமாண்ட்' ரூ.2 லட்சமாக விலை உயர்வு