சுகாஸ் ஷெட்டி கொலை வழக்கு; என்.ஐ.ஏ.,விடம் ஒப்படைப்பு

பெங்களூரு: பஜ்ரங் தள் தொண்டர் சுகாஸ் ஷெட்டி கொலை வழக்கை, என்.ஐ.ஏ.,விடம் ஒப்படைத்து, மத்திய உள்துறை உத்தரவிட்டுள்ளது.
தட்சிண கன்னடாவின் பன்ட்வால் தாலுகாவை சேர்ந்த சுகாஸ் ஷெட்டி, 35, பஜ்ரங் தள் தொண்டர். கடந்த மாதம் 1ம் தேதி இரவு மங்களூரு கின்னிபதவு என்ற இடத்தில், நடுரோட்டில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 12 பேரை மங்களூரு சி.சி.பி., போலீசார் கைது செய்தனர்.
சுகாஸ் ஷெட்டி கொலையில் பி.எப்.ஐ., அமைப்பினருக்கு தொடர்பு இருப்பதாகவும், இந்த கொலைக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்ததாகவும் பா.ஜ., தலைவர்கள் குற்றஞ்சாட்டினர். இந்த வழக்கை என்.ஐ.ஏ., விசாரணைக்கு ஒப்படைக்கும்படி, அரசை வலியுறுத்தினர்.
இதுதொடர்பாக கவர்னர் தாவர்சந்த் கெலாட்டை சந்தித்து பா.ஜ., தலைவர்கள் மனு அளித்தனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம், சுகாஸ் ஷெட்டி கொலை வழக்கை என்.ஐ.ஏ.,யிடம் ஒப்படைத்து நேற்று மாலை உத்தரவிட்டது. மத்திய அரசின் நடவடிக்கையை, கர்நாடக பா.ஜ., தலைவர் விஜயேந்திரா வரவேற்றுள்ளார்.
மேலும்
-
நாய்களை தெருக்களில் வாக்கிங் அழைத்து வர தடை ; ஈரான் அரசு
-
சத்தீஸ்கரில் பயங்கர குண்டுவெடிப்பு: ஏ.எஸ்.பி., உயிரிழப்பு; தீவிர விசாரணை!
-
புலிகள் காப்பகத்தில் மரங்கள் வெட்டி கடத்தல்; வன ஆர்வலர்கள் அதிர்ச்சி!
-
மஹா.,வில் ரயிலில் இருந்து தவறி விழுந்து 5 பேர் பலி; கூட்ட நெரிசலால் நிகழ்ந்த சோகம்!
-
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 6,491 ஆக உயர்வு; 24 மணி நேரத்தில் கேரளாவில் 143 பேருக்கு உறுதி
-
நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி