2 கிலோ கஞ்சா சாக்லேட் கடத்தியவர்களுக்கு வலை

கோவை; வடமாநிலத்தில் இருந்து ரயிலில், கஞ்சா சாக்லேட் கடத்தி வந்த நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.

வடமாநிலங்களில் இருந்து கோவைக்கு, ரயில்களில் கஞ்சா கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதை தடுக்க, போலீசார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கோவை ரயில்வே ஸ்டேஷனில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ரயிலில் இருந்து இறங்கிய, பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது நடைமேடை 1 'ஏ' வில் கேட்பாரற்ற நிலையில், மூட்டை ஒன்று கிடந்தது.

அதில் 2 கிலோ கஞ்சா சாக்லேட்கள் இருந்தன. கைபற்றப்பட்ட கஞ்சா சாக்லேட்டுகளை, ரயில்வே போலீசார் கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement