2 கிலோ கஞ்சா சாக்லேட் கடத்தியவர்களுக்கு வலை
கோவை; வடமாநிலத்தில் இருந்து ரயிலில், கஞ்சா சாக்லேட் கடத்தி வந்த நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.
வடமாநிலங்களில் இருந்து கோவைக்கு, ரயில்களில் கஞ்சா கடத்தல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதை தடுக்க, போலீசார் தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், கோவை ரயில்வே ஸ்டேஷனில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ரயிலில் இருந்து இறங்கிய, பயணிகளின் உடமைகளை சோதனை செய்தனர். அப்போது நடைமேடை 1 'ஏ' வில் கேட்பாரற்ற நிலையில், மூட்டை ஒன்று கிடந்தது.
அதில் 2 கிலோ கஞ்சா சாக்லேட்கள் இருந்தன. கைபற்றப்பட்ட கஞ்சா சாக்லேட்டுகளை, ரயில்வே போலீசார் கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தேனிலவுக்கு சென்ற இடத்தில் புது மாப்பிள்ளை கொலை: புது மணப்பெண் உட்பட 4 பேர் கைது
-
வார தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 சரிவு; ஒரு சவரன் ரூ.71,640!
-
காசாவுக்கு சென்ற கப்பலை சிறைபிடித்த இஸ்ரேல்: மனித உரிமை செயற்பாட்டாளர்கள் கைது
-
பாகிஸ்தான் கழுதைக்கு 'டிமாண்ட்' ரூ.2 லட்சமாக விலை உயர்வு
-
அதிகாலை பயணத்தால் தொடரும் விபரீதம்; நெடுஞ்சாலையில் கார்- வேன் மோதி 12 வயது சிறுமி உட்பட 2 பேர் பலி
-
ஹமாஸ் தலைவன் முகமது சின்வாரை கொன்றது இப்படிதான்: இஸ்ரேல் தகவல்!
Advertisement
Advertisement