பத்திரிக்கையாளர் மீது உருட்டு கட்டை தாக்குதல்
புதுக்கோட்டை; புதுக்கோட்டையில் வீடு புகுந்து செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய, சமூக விரோத கும்பலில் இருவரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டையில், மாலைமலர் நாளிதழ் மாவட்ட செய்தியாளராக, மனோகர், 54, என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் நரிமேடு பகுதியில் உள்ள நகர்புற வாழ்விட மேம்பாடு வாரிய அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.
அதே பகுதியில், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ஒரு கும்பலுக்கு அப்பகுதியில், வீடு வாடகைக்கு கொடுக்க சிலர் மறுத்துள்ளனர். இதற்கு மனோகர் தான் காரணம் என தவறுதலாக புரிந்துள்ளனர். இந்நிலையில், அந்த கும்பலை சேர்ந்த 5 பேர் நேற்றுமுன் தினம் மனோகர் வீட்டிற்குள் புகுந்து உருட்டு கட்டைகளை கொண்டு மனோகர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இதில், படுகாயம் அடைந்த மனோகர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். புகாரின்படி, திருக்கோணம் போலீசார், இருவரை கைது செய்தனர். மேலும், மூவரை தேடி வருகின்றனர்.
மேலும்
-
நாய்களை தெருக்களில் வாக்கிங் அழைத்து வர தடை ; ஈரான் அரசு
-
புலிகள் காப்பகத்தில் மரங்கள் வெட்டி கடத்தல்; வன ஆர்வலர்கள் அதிர்ச்சி!
-
மஹா.,வில் ரயிலில் இருந்து தவறி விழுந்து 5 பேர் பலி; கூட்ட நெரிசலால் நிகழ்ந்த சோகம்!
-
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு 6,491 ஆக உயர்வு; 24 மணி நேரத்தில் கேரளாவில் 143 பேருக்கு உறுதி
-
நல்லாட்சி நடத்துவதில் கவனம்: பிரதமர் மோடி உறுதி
-
தினமலர் இல்ல திருமண விழா ! பிரதமர் மோடி, கவர்னர், முதல்வர் வாழ்த்து