2026ல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்தே தீரும்; ராமதாஸ் உறுதி

சென்னை: ''2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்தே தீரும்'' என பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.
சென்னையில் கோட்டூர்புரத்தில் நிருபர்களிடம் ராமதாஸ் கூறியதாவது: சொல்வதற்கு புதிய செய்தி ஒன்றும் இல்லை. வியாழக்கிழமை தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கிறேன். அப்போது நல்ல செய்தி வரும் என்றார்.
பின்னர், தமிழகத்தில் தி.மு.க., ஆட்சியை தூக்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர் என அமித்ஷா கூறியதாகவும், 2026ல் மாற்றம் வருமா எனவும் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு, ''மாற்றம் வந்து தான் தீர வேண்டும். கட்டாயமாக மாற்றம் வரும். 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்தே தீரும்'' என்று ராமதாஸ் பதிலளித்தார்.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரும் என்று ராமதாஸ் கூறியது மூலம், தி.மு.க.,வில் பா.ம.க., கூட்டணி இல்லை என்பது ஏறக்குறைய உறுதியாகி உள்ளது என அரசியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க.,வுடன் பா.ம.க., கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது.











மேலும்
-
தொண்டர்களே என் குலதெய்வம்; அவர்களுக்காக எதையும் செய்வேன்: ராமதாஸ் நெகிழ்ச்சி
-
டில்லியில் தொடரும் சட்ட விரோத குடியேறிகள் மீது நடவடிக்கை: வங்கதேசத்தினர் 66 பேர் கைது
-
ராமதாஸ் - அன்புமணி இடையே ஒற்றுமை ஏற்பட வேண்டி மங்கள ஆதித்ய யாகம் நடத்திய பா.ம.க.,வினர்
-
நிகழ்காலத்தை விட்டுவிட்டு 2047ம் ஆண்டு கனவுகளை விற்கின்றனர்; ராகுல் குற்றச்சாட்டு
-
மும்பையில் பயணிகள் 5 பேர் உயிரிழந்த விவகாரம் எதிரொலி; புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் அமைக்க முடிவு
-
பொறுப்பற்றவருக்கு கடவுள் நல்ல புத்தி கொடுக்கட்டும்: ராகுலை சாடிய ஜே.பி.நட்டா