ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ்., அதிகாரி அருண்ராஜ் த.வெ.க.,வில் ஐக்கியம்

21

சென்னை: ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ்., அதிகாரி அருண்ராஜ் த.வெ.க.,வில் இணைந்தார். அவர் கொள்கை பரப்புப் பொதுச்செயலாளர் ஆக நியமிக்கப்பட்டு உள்ளார்.

தி.மு.க.,வைச் சேர்ந்த ஶ்ரீவைகுண்டம் முன்னாள் எம்.எல்.ஏ. டேவிட் செல்வன், அ.தி.மு.க.,வைச் சேர்ந்த வால்பாறை முன்னாள் எம்.எல்.ஏ. டாக்டர் ஶ்ரீதரன், ஜேப்பியார் கல்வி அறக்கட்டளை டாக்டர் மரிய வில்சன், மயிலாப்பூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜலட்சுமி, முன்னாள் நீதிபதி சுபாஷ் ஆகியோர் த.வெ.க.,வில் இணைந்தனர்.


ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ்., அதிகாரி அருண்ராஜ் இன்று த.வெ.க.,வில் இணைந்தார். அவர் கொள்கை பரப்புப் பொதுச்செயலாளர் ஆக நியமிக்கப்பட்டு உள்ளார். கட்சியினர் புதிய பொறுப்பாளருக்கு முழு ஒத்துழைப்பை நல்கி, வரும் சட்டசபை தேர்தலுக்கான கட்டமைப்பு மற்றும் தேர்தல் முன்னெடுப்புகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்று விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மிக்க மகிழ்ச்சி!




த.வெ.க.,வில் இணைந்த பிறகு, ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ்., அதிகாரி அருண்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் வெற்றியை தாண்டி ஒரு, அடிப்படை சமூக அரசியல் மாற்றத்திற்காக தலைவர் (விஜய்) எடுத்திருக்கும் உன்னத பணியில், என்னையும் இணைத்துக் கொண்டது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.

இத்தனை வருடம் பார்த்து விட்டோம். ஒரு மாற்றம் தேவை. அதற்கு தான் சாதாரண மனிதனாக இந்த முடிவை எடுத்து உள்ளேன். உண்மையான கொள்கை பிடிப்பை த.வெ.க., வில் தான் பார்க்கிறேன்.

உண்மையான அதிகாரம் மக்களிடம் தான் இருக்கிறது. மக்களுக்கு மேலும் சேவை செய்ய அரசியலுக்கு வந்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement