ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ்., அதிகாரி அருண்ராஜ் த.வெ.க.,வில் ஐக்கியம்

சென்னை: ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ்., அதிகாரி அருண்ராஜ் த.வெ.க.,வில் இணைந்தார். அவர் கொள்கை பரப்புப் பொதுச்செயலாளர் ஆக நியமிக்கப்பட்டு உள்ளார்.
ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ்., அதிகாரி அருண்ராஜ் இன்று த.வெ.க.,வில் இணைந்தார். அவர் கொள்கை பரப்புப் பொதுச்செயலாளர் ஆக நியமிக்கப்பட்டு
உள்ளார். கட்சியினர் புதிய பொறுப்பாளருக்கு முழு ஒத்துழைப்பை நல்கி, வரும் சட்டசபை தேர்தலுக்கான கட்டமைப்பு மற்றும் தேர்தல் முன்னெடுப்புகளை முழுவீச்சில் மேற்கொள்ள வேண்டும் என்று விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மிக்க மகிழ்ச்சி!
த.வெ.க.,வில் இணைந்த பிறகு, ஓய்வு பெற்ற ஐ.ஆர்.எஸ்., அதிகாரி அருண்ராஜ் நிருபர்களிடம் கூறியதாவது: தேர்தல் வெற்றியை தாண்டி ஒரு, அடிப்படை சமூக அரசியல் மாற்றத்திற்காக தலைவர் (விஜய்) எடுத்திருக்கும் உன்னத பணியில், என்னையும் இணைத்துக் கொண்டது மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது.
இத்தனை வருடம் பார்த்து விட்டோம். ஒரு மாற்றம் தேவை. அதற்கு தான் சாதாரண மனிதனாக இந்த முடிவை எடுத்து உள்ளேன். உண்மையான கொள்கை பிடிப்பை த.வெ.க., வில் தான் பார்க்கிறேன்.
உண்மையான அதிகாரம் மக்களிடம் தான் இருக்கிறது. மக்களுக்கு மேலும் சேவை செய்ய அரசியலுக்கு வந்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.













மேலும்
-
வங்கதேச வன்முறையில் முக்கிய புள்ளிக்கு மே.வங்கத்தில் ஓட்டு: புயல் கிளப்பும் வாக்காளர் பட்டியல்
-
தொண்டர்களே என் குலதெய்வம்; அவர்களுக்காக எதையும் செய்வேன்: ராமதாஸ் நெகிழ்ச்சி
-
டில்லியில் தொடரும் சட்ட விரோத குடியேறிகள் மீது நடவடிக்கை: வங்கதேசத்தினர் 66 பேர் கைது
-
ராமதாஸ் - அன்புமணி இடையே ஒற்றுமை ஏற்பட வேண்டி மங்கள ஆதித்ய யாகம் நடத்திய பா.ம.க.,வினர்
-
நிகழ்காலத்தை விட்டுவிட்டு 2047ம் ஆண்டு கனவுகளை விற்கின்றனர்; ராகுல் குற்றச்சாட்டு
-
மும்பையில் பயணிகள் 5 பேர் உயிரிழந்த விவகாரம் எதிரொலி; புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் அமைக்க முடிவு