மேட்டூர் அணையில் ஜூன் 12ல் தண்ணீர் திறப்பு; இன்றைய நிலவரம் இதோ!

சேலம்: மேட்டூர் அணையில் இருந்து, காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக வரும் ஜூன் 12ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், விவசாயிகள், சாகுபடிக்கு ஆயத்த பணியை தொடங்கி உள்ளனர்.
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. அணையில் இருந்து, காவிரி டெல்டா மாவட்ட பாசனத்திற்காக வரும் ஜூன் 12ம் தேதி காலை 9 மணிக்கு முதல்வர் ஸ்டாலின் தண்ணீரை திறந்து விடுகிறார்.
இதன்மூலம், 12 டெல்டா மாவட்டங்களில், 17.10 லட்சம் ஏக்கர் நிலங்களில் குறுவை, சம்பா, தாளடி பயிர்கள் சாகுபடி செய்யப்படும். டெல்டா மாவட்ட விவசாயிகள், சாகுபடிக்கு ஆயத்த பணியை தொடங்கி உள்ளனர்.
மேலும் மேட்டூர் அணையில் மதகுகள் சீரமைப்பு பணி, நெடுஞ்சாலை சார்பில் சாலையோரத்தில் வளர்ந்திருந்த புல், பூண்டுகள், பொக்லைன் மூலம் அகற்றப்பட்டுள்ளன.
இன்றைய நிலவரம்!
மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. தற்போது அணையில் 114 அடி நீர் உள்ளது.
அணைக்கு 5,980 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.


மேலும்
-
தொண்டர்களே என் குலதெய்வம்; அவர்களுக்காக எதையும் செய்வேன்: ராமதாஸ் நெகிழ்ச்சி
-
டில்லியில் தொடரும் சட்ட விரோத குடியேறிகள் மீது நடவடிக்கை: வங்கதேசத்தினர் 66 பேர் கைது
-
ராமதாஸ் - அன்புமணி இடையே ஒற்றுமை ஏற்பட வேண்டி மங்கள ஆதித்ய யாகம் நடத்திய பா.ம.க.,வினர்
-
நிகழ்காலத்தை விட்டுவிட்டு 2047ம் ஆண்டு கனவுகளை விற்கின்றனர்; ராகுல் குற்றச்சாட்டு
-
மும்பையில் பயணிகள் 5 பேர் உயிரிழந்த விவகாரம் எதிரொலி; புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகள் அமைக்க முடிவு
-
பொறுப்பற்றவருக்கு கடவுள் நல்ல புத்தி கொடுக்கட்டும்: ராகுலை சாடிய ஜே.பி.நட்டா