கூழாங்கல்சேரி குளத்தை சீரமைக்க கோரிக்கை

ஸ்ரீபெரும்புதுார்,வைப்பூர் ஊராட்சிக்குட்பட்ட கூழாங்கல்சேரி கிராமத்தில், அரசு தொடக்கப் பள்ளி எதிரே, பொதுக் குளம் உள்ளது. இக்குளம் அப்பகுதியின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது.
இப்பகுதியினர், 20 ஆண்டுகளுக்கு முன், இந்த குளத்தின் நீரை குடிநீராக பயன்படுத்தி வந்தனர்.
தற்போது குளம் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. இதனால், குளம் முழுதும் பாசி படர்ந்து, குளத்தின் நீர் உபயோகிக்க முடியாத நிலை உள்ளது. மேலும், இரவு நேரங்களில் குளக்கரையில் அமர்ந்து மது அருந்துவோர், காலி மதுபாட்டில் மற்றும் பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை குளத்தில் வீசி செல்கின்றனர்.
இதனால், குளம் முழுதும் பிளாஸ்டிக் பாட்டில்கள் நிரம்பி உள்ளன
எனவே, குளத்தை துார் வாரி சீரமைத்து, பாதுகாக்க ஊராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கேட்டால் கேட்ட வரம் தரும் 'சென்னகேசவர்'
-
கன்னடத்தில் பேசுமாறு கூறியதால் வடமாநில பெண் வாக்குவாதம்
-
திருட வர மறுத்தவருக்கு கத்திக்குத்து தப்பியோடியவருக்கு போலீஸ் வலை
-
மாணவர் சேர்க்கை அதிகரிக்க தனியார் வழியில் கல்வித்துறை
-
செக் போஸ்ட்
-
வேலையை உதறிவிட்டு த.வெ.க.,வில் சேர்ந்த ஐ.ஆர்.எஸ்., அதிகாரிக்கு கொ.ப.செ., பதவி
Advertisement
Advertisement