பைக்குகள் மோதி 2 பேர் பலி சிதம்பரம் அருகே சோகம்

சிதம்பரம் : சிதம்பரத்தில் பைக்குகள் நேருக்கு மோதிய விபத்தில் என்.எல்.சி., ஊழியர் உட்பட 2 பேர் இறந்தனர்.

கடலுார் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலை நகர், முத்தையா நகரைச் சேர்ந்தவர் ராமநாதன், 40; என்.எல்.சி., ஊழியர். இவர், நேற்று காலை வேலைக்கு சிதம்பரம்-புவனகிரி செல்லும் பைபாஸ் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.

வயலுார் அருகில் 8:30 மணிக்கு வந்த போது, சிதம்பரம், கஞ்சித்தொட்டியில் பிரிண்டிங் பிரஸ் நடத்தி வந்த சுந்தரேசன்,47; என்பவர் ஓட்டி வந்த பைக்கும், ராமநாதன் ஓட்டி வந்த பைக்கும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில், இருவரும் துாக்கி வீசப்பட்டனர்.

பலத்த காயமடைந்த ராமநாதன் சம்பவ இடத்திலேயே இறந்தார். தகவலறிந்த சிதம்பரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, உயிருக்கு போராடிய சுந்தரேசனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் செல்லும் வழியில் இறந்தார். இச்சம்வம் குறித்து சிதம்பரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement