பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்; ராகுலுடன் சித்தராமையா சந்திப்பு!

16


புதுடில்லி: டில்லி சென்றுள்ள கர்நாடகா முதல்வர் சித்தராமையா காங்கிரஸ் எம்.பி., ராகுலை சந்தித்து கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார்.


பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடந்த ஆர்.சி.பி., அணியின் பாராட்டு விழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து போலீஸ் கமிஷனர் தயானந்தா உட்பட சில அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். காங்கிரஸ் அரசை, எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.


இச்சம்பவத்தால், தேசிய அளவில் காங்கிரஸ் மீது அவப்பெயர் ஏற்பட்டு உள்ளது. முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் மீது அதிருப்தி அடைந்தனர். கட்சி மேலிடம் உத்தரவின் பேரில், விளக்கம் அளிக்க முதல்வர் சித்தராமையா, இன்று (ஜூன் 10) டில்லி வந்தார். அவர் காங்கிரஸ் எம்.பி., ராகுலை சந்தித்து கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் உடன் இருந்தார்.

Advertisement