பள்ளி எதிரில் குளம் பெற்றோர் அச்சம்

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அடுத்த வானமாதேவி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி எதிரில் உள்ள குளத்தை சுற்றி மதல் சுவர் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நடுவீரப்பட்டு அடுத்த வானமாதேவியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுற்று வட்டாரங்களை மாணவர்கள் அதிகளவு படித்து வருகின்றனர். பள்ளிக்கு எதிரில் குளம் உள்ளது. குளத்தில் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்துள்தால் துர்நாற்றம் வீசுவதுடன் குளம் வீணாகி வருகிறது. விஷ ஜந்துகள் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கு படையெடுக்கிறது.
அதே வேளையில் பள்ளி இடைவெளியில் மாணவர்கள் குளத்தின் அருகில் சுற்றித் திரியும் போது, குளத்தில் தவறி விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால், பெற்றோர் அச்சமடைந்துள்ளனர். எனவே, அசம்பாவித சம்பவங்களை தடுக்க குளத்தை சுற்றி சுவர் அமைப்பதுடன், ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.
மேலும்
-
கொங்கு மண்டலம் கொலைக்களத் தலைநகராகிறது: சீமான் வேதனை
-
பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம்; ராகுலுடன் சித்தராமையா சந்திப்பு!
-
விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்மநபர்கள்; சென்னையில் 3வது முறை சம்பவம்!
-
பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம்!
-
சத்தீஸ்கரில் சரக்கு ரயில் மோதி 2 பேர் உயிரிழந்த சோகம்; 2 பேர் காயம்
-
இரண்டு நாட்களாக தங்கம் விலை சரிவு; ஒரு சவரன் ரூ.71,560!