திருமாவளவன் தடுமாற்றம் முருகன் விளக்கம்

புதுச்சேரி: புதுச்சேரியில், மத்திய இணையமைச்சர் முருகன் அளித்த பேட்டி:

கடந்த 11 ஆண்டுகளில் பிரதமர் மோடி தலைமையிலான அரசால் நாடு வளர்ச்சி பெற்றுள்ளது. 2014ம் ஆண்டுக்கு முன் இருந்த ஆட்சியாளர், முடிவு எடுக்க தைரியமற்றவர்களாக இருந்தனர்.

வரும் தேர்தலில் 'இண்டி' கூட்டணி தோல்வி அடையும் என்பது வி.சி., தலைவர் திருமாவளவனுக்கு தெரியும். அதனால், கூட்டணியில் தொடரலாமா அல்லது வேறு அணிக்கு செல்லலாமா என்ற தடுமாற்றத்தில் அவர் உள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement