நாளை 3 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலெர்ட்; இன்று 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

1


சென்னை: தமிழகத்தில் இன்று (ஜூன் 12) 6 மாவட்டங்களில் கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இன்று (ஜூன் 12) கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* நீலகிரி

* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்

* தேனி

* தென்காசி

* கன்னியாகுமரி

* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்

நாளை (ஜூன் 13)

மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:


* நீலகிரி

* கோவை
* தென்காசி

கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* தேனி,

* திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள்

* கன்னியாகுமரி

ரெட் அலெர்ட் (அதி கனமழை)

ஜூன் 14, 15ம் தேதிகளில் நீலகிரிக்கு அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

நாளை மறுநாள் (ஜூன் 14)

மிக கனமழை (ஆரஞ்சு அலெர்ட்) பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்;

* கோவை

* தென்காசி

* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்

கனமழை (மஞ்சள் அலெர்ட்) பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* திண்டுக்கல்

* தேனி

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement