பெங்களூரு போலீசுக்கு 'தண்ணி' காட்டிய நைஜீரிய நபர் கிருஷ்ணகிரியில் கைது
கிருஷ்ணகிரி: இணைய மோசடி வழக்கில், பெங்களூரு போலீசாரால் தேடப்பட்ட நைஜீரிய நாட்டை சேர்ந்தவரை, கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் துரத்தி பிடித்தனர்.
கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் நேற்று முன்தினம் இரவு, குந்தாரப்பள்ளி அருகே ஜீப்பில் ரோந்து சென்றபோது, கிருஷ்ணகிரி டோல்கேட் அருகே, ஓசூர் - கிருஷ்ணகிரி சாலையில், 'ஹூண்டாய் ஐ20' கார் ஒன்று நின்றது.
போலீசாரை பார்த்ததும், காரில் இருந்தவர் வேகமாக காரை ஓட்டி சென்றார். ஜீப்பில் துரத்திய போலீசார், கிருஷ்ணகிரி பைபாஸில் காரை மடக்கினர். விசாரித்ததில், அவர், நைஜீரிய நாட்டை சேர்ந்த எட்வர்ட் எபாம் இடுபோர், 43, என, தெரிந்தது.
இவர், 13 ஆண்டுகளாக இந்தியாவில் தங்கும் உரிமை பெற்று, பெங்களூருவில் ஏஜென்சி நடத்தி, இங்குள்ளவர்களுக்கு வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக தெரிவித்துள்ளார்.
அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதையடுத்து, காரில் போலீசார் சோதனையிட்டனர். இதில், அவரிடம் மூன்று ஐபோன்கள் உட்பட ஐந்து மொபைல் போன்கள், ஒரு லேப்டாப், ஏழு வங்கி கணக்கு புத்தகங்கள், 9 ஏ.டி.எம்., கார்டுகள், 4 வெளிநாட்டு பாஸ்போர்ட்டுகள், 3.93 லட்சம் ரூபாய் மற்றும் 100 யூரோ நோட்டுகள் இருந்தன.
கிருஷ்ணகிரி தாலுகா போலீசார், எட்வர்ட் எபாம் இடுபோரை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரது ஒரு மொபைல் போனை ஆன் செய்து சார்ஜ் போட்ட போது, அவரது மொபைல் சிக்னல் கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் ஸ்டேஷன் அருகில் காட்டியதால், பெங்களூரு போலீசார் உடனடியாக ஸ்டேஷனை தொடர்பு கொண்டு, நைஜீரிய நாட்டு நபரின் குற்றப்பின்னணியை விளக்கினர்.
பணம் இரட்டிப்பு, முதலீட்டுக்கு லாபம் எனக்கூறி, 1.15 கோடி ரூபாய் அளவில் இணையதள மோசடி செய்து, பெங்களூரு போலீசாரால் தேடப்படும் குற்றவாளி தான் இவர் என்பது தெரிந்தது.
நேற்று காலை பெங்களூரு மேற்கு சைபர் கிரைம் மற்றும் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கிருஷ்ணகிரி தாலுகா ஸ்டேஷனுக்கு வந்தனர். அவர்களிடம் எட்வர்ட் எபாம் இடுபோரை ஒப்படைத்தனர்.
மேலும்
-
பி.டி.ஓ., பொறுப்பேற்பு
-
அமெரிக்காவில் சட்டசபை உறுப்பினர் சுட்டுக் கொலை; போலீஸ் வேடத்தில் மர்மநபர் வெறிச்செயல்!
-
சினிமா புகழுடன் ஹீரோ வேஷத்துடன் வந்தவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்: திருமாவளவன்
-
ம.பி., என்கவுன்டரில் 3 பெண்கள் உள்பட 4 நக்சலைட்டுகள் பலி
-
மிரட்டலில் ஈடுபட அனுமதிக்கக்கூடாது: போப் வலியுறுத்தல்
-
தி.மு.க., பெயர் வைத்து ஏமாற்றுவது இனிமேல் நடக்காது: சொல்கிறார் அண்ணாமலை