வாரிசு வேலைக்கு காத்திருந்தவர் விபத்தில் பலியான பரிதாபம்

மேட்டூர்: வேனும் பைக்கும் நேருக்கு நேர் மோதியதில் வாரிசு வேலைக்கு காத்திருந்த வாலிபர் பலியானார்.
மேச்சேரி, மல்லிகுந்தம், வேங்கானுாரை சேர்ந்தவர் பிரதீப், 23. மின்கழகத்தில் வேலை செய்த அவரது தந்தை, 4 ஆண்டுக்கு முன் இறந்து விட்டார். பாலிடெக்னிக் படித்துள்ள பிரதீப், தந்-தையின் வாரிசு வேலைக்கு காத்திருந்தார்.
நேற்று மதியம், 3:30 மணிக்கு, நண்பருடன் யமஹா பைக்கில் ெஹல்மெட் அணியாமல் மேச்சேரியில் இருந்து மேட்டூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார். எம்.காளிப்பட்டி அருகே சென்ற-போது, மேட்டூரில் இருந்து மேச்சேரி நோக்கி வந்த சரக்கு வேனும், பைக்கும் நேருக்கு நேர் மோதின. பிரதீப் உயிரிழந்தார். அவருடன் அமர்ந்திருந்த, அவரது நண்பர் படுகாயம் அடைந்து, கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்-லப்பட்டார். மேச்சேரி போலீசார் விசாரிக்கின்றனர்.
அந்தியூர் டிரைவர்
அந்தியூர் தாலுகா, பூசாரியூரை சேர்ந்த, டிராக்டர் டிரைவர் சுப்ர-மணி, 59. இவரது தங்கை விஜயாவின் மகளுக்கு, சேலம் மாவட்டம் மேச்சேரி அடுத்த கூணான்டியூரை சேர்ந்த வெங்-கடேஷ் என்பவருக்கும் திருமணம் செய்ய திட்டமிட்டனர். அதை உறுதிப்படுத்த, சுப்ரமணி, அவரது மனைவி ராஜகுமாரி, 47, விஜயா உள்ளிட்ட உறவினர்கள், நேற்று முன்தினம் காரில் கூணாண்டியூர் சென்றனர்.
சுப்ரமணி ஓட்டினார். வெங்கடேஷ் வீட்டுக்கு சென்றுவிட்டு மாலை, 6:30 மணிக்கு, வீட்டுக்கு புறப்பட்டனர். கருமலைக்கூ-டலில் சென்றபோது, மேட்டூரில் இருந்து மேச்சேரி நோக்கி சென்ற லாரி, கார் மீது மோதியது.
இதில் சுப்ரமணி பலியானார். காரில் இருந்த மற்றவர்கள், லேசான காயத்துடன் தப்பினர். கருமலைக்கூடல் போலீசார் விசா-ரிக்கின்றனர்.

Advertisement