நிழற்குடை திறப்பு

சிவகங்கை : கீரனுார் கிராமத்தில் எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5.50 லட்சத்தில் கட்டப்பட்ட நிழற்குடை திறப்பு விழா நடந்தது. எம்.எல்.ஏ., செந்தில்நாதன் திறந்து வைத்தார்.

முத்துப்பட்டி கிராமத்தில் உள்ள நம்பிக்கை மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்ட ரூ.50 ஆயிரம் வழங்கினார்.

ஒன்றிய செயலாளர்கள் செல்வமணி, பழனிசாமி, அருள் ஸ்டீபன், நகர செயலாளர் ராஜா கலந்துகொண்டனர்.

Advertisement