தேசிய லோக் அதாலத் : 627 வழக்குகள் தீர்வு

பண்ருட்டி : பண்ருட்டி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 'லோக் அதாலத்' எனும் தேசிய மக்கள் மக்கள் நீதிமன்றம் நடந்தது.

சார்பு நீதிபதி மும்தாஜ் தலைமை தாங்கினார். வங்கிக் கடன் வழக்குகள், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், பண மோசடி வழக்குகள், சொத்து சம்பந்தமான சிவில் வழக்குகள், சமரசம் ஏற்படக்கூடிய கிரிமினல் வழக்குகள் என, 627 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, 1 கோடியே 67 லட்சத்து 45 ஆயிரத்து 822 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.

உரிமையியல் நீதிமன்ற நீதிபதி ரேணுகா தேவி, குற்றவியல் நீதித்துறை மாஜிஸ்திரேட்கள் கீதா, மார்ஷல் ஏசுவடியான் மற்றும் வழக்கறிஞர்கள் உடனிருந்தனர். ஏற்பாடுகளை சட்ட பணிகள் குழு நிர்வாக உதவியாளர் தியாகப்பிரியன் செய்திருந்தார்.

Advertisement