சிறுமிக்கு பாலியல் தொல்லை ராமநாதபுரம் வாலிபர் கைது

திருநெல்வேலி:திருநெல்வேலியை சேர்ந்த 17 வயது சிறுமியுடன் சமூக வலைதளத்தில் பழகி ராமநாதபுரம் அழைத்து சென்று பாலியல் தொல்லை தந்ததாக வாலிபர் 'போக்சோ'வில் கைது செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மேலப்பாளையத்தை சேர்ந்த 17 வயது மாணவி, பிளஸ் 2 படிக்கிறார். இன்ஸ்டாகிராம் சமூக வலைத்தளத்தில் ராமநாதபுரம் மாவட்டம் காஞ்சிரங்குடியை சேர்ந்த மாதேஸ்வரன் 23, என்பவருடன் பழகி வந்தார். ஏ.சி. மெக்கானிக் வேலை பார்த்த வாலிபர், திருநெல்வேலி வந்து சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி ராமநாதபுரம் அழைத்துச் சென்றுள்ளார். மேலப்பாளையம் போலீசார் சிறுமியை மீட்டனர். அவரை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக மாதேஸ்வரனை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீலகிரிக்கு ரெட், கோவைக்கு ஆரஞ்சு, 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்; வானிலை மையம் தகவல்
-
குஜராத் முன்னாள் முதல்வர் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டது; 20 பேர் உடல் ஒப்படைப்பு!
-
என்னை மன்னித்துவிடுங்கள்; தந்தையிடம் பகிரங்கமாக கேட்டார் அன்புமணி!
-
உத்தரபிரதேசத்தில் ராக்கெட் ஏவும் சோதனை வெற்றி; இஸ்ரோ சாதனை
-
பா.ம.க., பொதுச்செயலாளர் நீக்கம்; ராமதாஸ் அறிவிப்பு
-
பனை மரம் ஏறி கள் இறக்கினார் சீமான்; தடையை மீறி போராட்டம்!
Advertisement
Advertisement