நீலகிரிக்கு ரெட், கோவைக்கு ஆரஞ்சு, 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்; வானிலை மையம் தகவல்

1


சென்னை: நீலகிரிக்கு இன்று (ஜூன் 15) அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல் கோவைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுத்து சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கை: நீலகிரிக்கு இன்று (ஜூன் 15) அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல் கோவைக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது.

கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:

* திருப்பூர்

* திண்டுக்கல்

* தேனி

* தென்காசி

* கன்னியாகுமரி

* திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள்


@twitter@https://x.com/ChennaiRmc/status/1934157415844557270twitter

நாளை(ஜூன் 16) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:

* நீலகிரி

* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்

* திருப்பூர்,

* திண்டுக்கல்

* தேனி

* தென்காசி

நாளை மறுநாள் (ஜூன் 17) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்:

* நீலகிரி

* கோவை மாவட்ட மலைப்பகுதிகள்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement