கால்நடை குடிநீர் தொட்டியில் மதுபாட்டில்கள்

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு ஒன்றியம் ராமச்சந்திராபுரம் ஊராட்சியில், விவசாயிகள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இங்குள்ள கால்நடைகளின் தேவைக்காக, கிராமத்தின் எல்லையில் கால்நடை குடிநீர் தொட்டி கட்டப்பட்டுள்ளது.
இந்த தொட்டியின் சுவரில் அமர்ந்து மது அருந்தும் 'குடி'மகன்கள், காலி மதுபாட்டில்களை தொட்டியில் வீசிவிட்டு செல்கின்றனர். இதனால், தண்ணீர் குடிக்க வரும் கால்நடைகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
இதனால், தொட்டியில் தண்ணீர் நிரப்புவது கைவிடப்பட்டுள்ளது. கால்நடைகளின் தேவைக்காக கட்டப்பட்ட குடிநீர் தொட்டி, பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
எனவே, ராமச்சந்திராபுரம் பகுதியில் பொது இடங்களில் மது அருந்தும் நபர்களை கட்டுப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
நீலகிரிக்கு ரெட், கோவைக்கு ஆரஞ்சு, 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலெர்ட்; வானிலை மையம் தகவல்
-
குஜராத் முன்னாள் முதல்வர் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டது; 20 பேர் உடல் ஒப்படைப்பு!
-
என்னை மன்னித்துவிடுங்கள்; தந்தையிடம் பகிரங்கமாக கேட்டார் அன்புமணி!
-
உத்தரபிரதேசத்தில் ராக்கெட் ஏவும் சோதனை வெற்றி; இஸ்ரோ சாதனை
-
பா.ம.க., பொதுச்செயலாளர் நீக்கம்; ராமதாஸ் அறிவிப்பு
-
பனை மரம் ஏறி கள் இறக்கினார் சீமான்; தடையை மீறி போராட்டம்!
Advertisement
Advertisement