முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்க பூஜாரிகள் முடிவு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட பூஜாரிகள் பேரமைப்பின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாநில கொள்கை பரப்பு செயலாளர் உதயகுமார் சிவாச்சாரியார் தலைமையில் நடந்தது.

மாவட்டத்தலைவர் சரவணக்குமார், செயலர் சந்தோஷ்குமார், செய்தி தொடர்பு செயலர் குமார் முன்னிலை வகித்தனர். சாணார்பட்டி ஒன்றிய துணைத்தலைவர் ஜெய வெங்கட்ராமன் வரவேற்றார்.

ஹிந்து சமய அறநிலையத்துறையில் பதிவுப்பெற்ற பூஜாரிகளுக்கு பதிவு, புதுப்பித்தல், ஓய்வூதியம் பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தை அரசு நீக்க வேண்டும், அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்துவது, ஜூன் 22ல் மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டில் கலந்துகொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.பெரியசாமி பூஜாரி நன்றி கூறினார்.

Advertisement