மணாலியில் ஜிப்லைனில் சென்றபோது விபத்து: 30 அடி உயரத்தில் இருந்து விழுந்த பெண்

மணாலி; மணாலியில் ஜிப் லைனில் செல்லும் போது கயிறு அறுந்து 30 அடி உயரத்தில் இருந்து பெண் ஒருவர் கீழே விழுந்த வீடியோ வைரலாகி உள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
ஹிமாச்சலப்பிரதேசம் மணாலி புகழ்பெற்ற சுற்றுலா தளம். இங்கு தற்போது பல்வேறு பகுதிகளில் இருந்து வந்துள்ள ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்து சுற்றி பார்த்து வருகின்றனர். நாக்பூர் பகுதியைச் சேர்ந்த பிரபுல்லா பிஜ்வே என்பவரும் தமது குடும்பத்தினருடன் அங்கு வந்திருந்தார்.
அங்குள்ள ஜிப்லைனில் பிரபுல்லா பிஜ்வே மகள் த்ரிஷா பிஜ்வே என்பவர் சென்று கொண்டிருந்தார். கிட்டத்தட்ட பாதி தூரம் அவர் கடந்த போது திடீரென ஜிப்லைன் கயிறு அறுந்தது. 30 அடி உயரத்தில் இருந்து அப்பெண் கீழே விழுந்தார்.
படுகாயம் அடைந்த த்ரிஷா, உடனடியாக அங்கிருந்து மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும்
-
அனுமதி இல்லாத பிளக்ஸ் பேனர்கள்... அகற்றப்படுமா; கலவரம் துாண்டும் வாசகங்களால் அபாயம்
-
பயிர் காப்பீட்டு திட்டத்தில் தேயிலை விவசாயம் தொழில்துறையினர் வரவேற்பு
-
அமெரிக்க ஜவுளி சந்தையில் உயர்கிறது இந்தியாவின் பங்கு
-
நகை கொள்ளையரை பிடிக்க தனிப்படை கேரளாவில் முகாம்
-
போலி ஆவணங்கள் வாயிலாக வீட்டு மனை மோசடி செய்தவருக்கு சிறை
-
முன்னாள் முதல்வர் ரூபானி உடல் மரபணுவால் அடையாளம் தெரிந்தது