நகை கொள்ளையரை பிடிக்க தனிப்படை கேரளாவில் முகாம்

போத்தனூர்; கேரள மாநிலம், திருச்சூர் டவுனை சேர்ந்தவர் ஜெய்ஸன் ஜேக்கப், 55. நகை கடை உரிமையாளரான இவர் நேற்று முன்தினம் 1.250 கிலோ தங்க கட்டிகளுடன் தன்னிடம் பணிபுரியும் விஷ்ணு, 20 என்பவருடன், கோவையிலிருந்து காரில், கேரளா நோக்கி செல்லும் போது, க.க.சாவடி அருகே, லாரியில் வந்த மர்ம நபர்கள், காருடன் தங்கக்கட்டிகளை கொள்ளையடித்து கேரளா மார்க்கமாக தப்பினர்.

க.க.சாவடி போலீசார் விசாரணை நடத்துகின்றனர். கொள்ளையர் பயன்படுத்திய லாரியின் பதிவெண்ணை கொண்டு, தனிப்படை போலீசார் கேரளாவில் தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். தங்கக்கட்டி எடுத்து வருவது, நகைக்கடை ஊழியர் விஷ்ணுவுக்கு மட்டுமே தெரியும் என்பதால், அவருக்கு தொடர்புள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.

Advertisement