நடைபாதை கட்டும் பணி அண்ணா நகரில் முடக்கம்

அண்ணா நகர்:அண்ணா நகர் மண்டலத்தில், 94 - 108 வார்டுகள் உள்ளன. இங்குள்ள அண்ணா நகர், திருமங்கலம், அமைந்தகரை, அரும்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் நடைபாதை சீரமைக்கும் பணிகளை, மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது. இப்பணிகள் மந்தகதியில் நடப்பதாக குற்றச்சாட்டுஎழுந்துள்ளது.
அண்ணா நகர் மேற்கு, இரண்டாவது அவென்யூ விரிவு பகுதியில், பழைய நடைபாதை கற்களை உடைத்து, சாலையோரம் போடப்பட்டன.
தற்போது வரை அவை அப்படியே மண்ணோடு மண்ணாக கிடக்கின்றன; புதிதாக நடைபாதை அமைக்கும் பணியும் நடக்கவில்லை.
அவ்வழியே நடந்து செல்லும் பாதசாரிகளுக்கு, உடைக்கப்பட்ட நடைபாதை கழிவுகள் இடையூறாக இருக்கின்றன. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் இதை கண்காணித்து, பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
வானில் பறந்த விமானங்கள் அடுத்தடுத்து கோளாறு; பயணிகள் பீதி
-
முற்றியது மோதல்; இஸ்ரேலில் ஈரான் தாக்குதலில் அமெரிக்க துணை தூதரகம் சேதம்!
-
மதுரை மீனாட்சியை மகிழ்வித்த திருக்கல்யாண பஞ்ச ரத்ன கீர்த்தனைகள்
-
மணிமொழி
-
குடும்ப கட்டுப்பாடு செய்ததால் தமிழகத்திற்கு ஆபத்து: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
தினமும் இரவு வெடிகுண்டு சத்தம்; ஈரானில் படிக்கும் இந்திய மாணவர்கள் கதறல்
Advertisement
Advertisement