முற்றியது மோதல்; இஸ்ரேலில் ஈரான் தாக்குதலில் அமெரிக்க துணை தூதரகம் சேதம்!

14


ஜெருசலேம்: இஸ்ரேலில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க துணை தூதரகம் சேதம் அடைந்துள்ளது. இதனால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.


இஸ்ரேல்-ஈரான் இடையே மோதல் அதிகரித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல், ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்துள்ளது. இருநாடுகளும் பரஸ்பரமாக வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றன.

இதுவரையில் ஈரானில் 230 பேரும், இஸ்ரேலில் குழந்தைகள் உள்பட 10 பேரும் கொல்லப்பட்டுள்ளனர். டெல் அவிவில் ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் அமெரிக்க துணை தூதரகம் சேதம் அடைந்துள்ளது. இதனால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க தூதர் மைக் ஹக்கபி கூறியதாவது:



இஸ்ரேலில் உள்ள அமெரிக்க தூதரகம் மற்றும் துணைத் தூதரகம் இன்று தற்காலிகமாக மூடப்பட்டு உள்ளது. டெல் அவிவ் நகரில் அமைந்துள்ள அமெரிக்க துணை தூதரகம் அருகே ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களால் சிறிய சேதங்கள் ஏற்பட்டன. ஆனால் அமெரிக்க தூதரக அதிகாரிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement