மூடிய 'அம்மா' குடிநீர் மையம் திறந்தால் பயனாக இருக்கும்

வளசரவாக்கம்:சென்னை மாநகராட்சி பகுதியில் ஏழை மக்களுக்காக, சுத்திகரிக்கப்பட்ட கேன் குடிநீர் வழங்கும் திட்டத்தை, 2016ம் ஆண்டு, அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா துவக்கி வைத்தார்.
இத்திட்டத்தின் கீழ் ஒரு மணி நேரத்தில் 3,000 லிட்டர் வரை குடிநீர் தயாரிக்கப்பட்டது. ஒரு நபருக்கு, தினமும் 20 லிட்டர் வீதம், 4 லட்சம் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வினியோகிக்கப்பட்டது. ஆட்சி மாற்றத்திற்குப் பின், பல்வேறு இடங்களில் உள்ள 'அம்மா' குடிநீர் மையங்கள் மூடப்பட்ட நிலையில் உள்ளன.
இதில், வளசரவாக்கம் மண்டலம், 151வது வார்டு சின்ன போரூர் பள்ளி தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அம்மா குடிநீர் மையங்கள், ஓராண்டிற்கும் மேலாக மூடப்பட்டுள்ளன. இதை முறையாக பராமரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால், பகுதிவாசிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மணிமொழி
-
தினமும் இரவு வெடிகுண்டு சத்தம்; ஈரானில் படிக்கும் இந்திய மாணவர்கள் கதறல்
-
பெருவில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்!
-
முழு பதிலடி கொடுப்போம்; போர் நிறுத்த பேச்சுவார்த்தையை ஏற்க ஈரான் மறுப்பு
-
வார தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு; ஒரு சவரன் ரூ.74,440!
-
ரோடு ஷோவிலும், போட்டோஷூட்டிலும் மட்டுமே கவனம்: முதல்வரை சாடிய இ.பி.எஸ்.,!
Advertisement
Advertisement