அதிக மின் அழுத்தத்தால் மின்சாதன பொருட்கள் பழுது

ஓசூர்: ஓசூரிலுள்ள ராயக்கோட்டை சாலையோரம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வாடகை குடியிருப்பு உள்ளது

. இப்பகுதியில் நேற்று மதியம், 2:00 மணிக்கு, திடீரென உயர் மின் அழுத்தம் ஏற்பட்டது. அதனால், டி பிளாக்கில் உள்ள வீடுகளில் இருந்த கம்ப்யூட்டர், ஸ்டெபிலைசர், 'டிவி' போன்ற பல்வேறு மின்சா-தன பொருட்கள் சேதமடைந்தன. அதன் பின் அப்பகுதியில் மின்-தடை ஏற்பட்டது. அதனால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளா-கினர். நஞ்சுண்டேஸ்வரர் நகர் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டதாக, மின்வாரியம் மூலம் கூறப்பட்டாலும், பல மணி நேரமான மின்-வாரியத்தால் மின் பழுதை சரிசெய்ய முடியவில்லை. 4 மணி நேரத்திற்கும் மேலான பின், மின்வாரியத்தினர் உயர் மின் அழுத்-தத்தை சரிசெய்து, வழக்கமான மின் வினியோகம் செய்ய ஏற்-பாடு செய்தனர்.

Advertisement