அறுபடை வீடுகளை தரிசிக்க சிறப்பு ரயில்கள் முருக பக்தர்கள் எதிர்பார்ப்பு
மதுரை: மதுரையில் ஜூன் 22ல் நடக்கவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு அறுபடை வீடுகளை இணைக்கும் வகையில் சிறப்பு ரயில்களை இயக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
மதுரையில் ஹிந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. அறுபடை வீடுகள் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களை சீரமைக்க வலியுறுத்தியும், முருக பக்தர்களை ஒன்று திரட்டவும் 'குன்றம் காக்க... கோயிலைக் காக்க...' என்ற பெயரில் மாநாடு நடக்கிறது.
இம்மாநாட்டில் பங்கேற்க தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான முருக பக்தர்கள் ஒன்று திரள்கின்றனர். அவர்களின் வசதிக்காக அறுபடை வீடுகளை இணைக்கும் வகையில் சிறப்பு ரயில்களை இயக்க பக்தர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.
அறுபடை வீடுகளில், மதுரை மாவட்டத்தில் திருப்பரங்குன்றம், சோலைமலை, திண்டுக்கல்லில் பழநி, துாத்துக்குடியில் திருச்செந்துார், தஞ்சாவூரில் சுவாமிமலை, திருவள்ளூரில் திருத்தணி உள்ளன. மாநாட்டிற்கு வர பழநியில் இருந்து ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் வழியாகவும், திருச்செந்துாரில் இருந்து திருநெல்வேலி, கோவில்பட்டி, விருதுநகர், திருப்பரங்குன்றம் வழியாகவும், திருத்தணியில் இருந்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், சிதம்பரம், மயிலாடுதுறை, சுவாமிமலை, தஞ்சை, திருச்சி, திண்டுக்கல் வழியாகவும் சிறப்பு ரயில்களை இயக்கலாம்.
பக்தர்கள் கூறுகையில், ''தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாநாட்டில் பங்கேற்போருக்கு வாகன கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளனர். சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டால் சிரமமின்றி பக்தர்கள் பங்கேற்க முடியும். இதற்கான வரவேற்பையடுத்து மதுரை வழியாக பழநி - திருச்செந்துார் இடையே, சுவாமிமலை வழியாக திருத்தணி - மதுரை இடையே அறுபடை வீடுகளை இணைக்கும் வகையில் நிரந்தர ரயில்களை இயக்கலாம்'' என்றனர்.
மேலும்
-
தினமும் இரவு வெடிகுண்டு சத்தம்; ஈரானில் படிக்கும் இந்திய மாணவர்கள் கதறல்
-
பெருவில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்!
-
முழு பதிலடி கொடுப்போம்; போர் நிறுத்த பேச்சுவார்த்தையை ஏற்க ஈரான் மறுப்பு
-
வார தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு; ஒரு சவரன் ரூ.74,440!
-
ரோடு ஷோவிலும், போட்டோஷூட்டிலும் மட்டுமே கவனம்: முதல்வரை சாடிய இ.பி.எஸ்.,!
-
விண்வெளி விஞ்ஞானி நெல்லை முத்து காலமானார்!