கட்சி நிகழ்ச்சிக்கு மாணவர்கள்; அண்ணாமலை கண்டனம்

சென்னை : தமிழக பா.ஜ., முன்னாள் தலைவர் அண்ணா மலை வெளியிட்ட அறிக்கை:
கோவை மாவட்டம், பொள்ளாச்சி சமத்துார் ராம அய்யங்கார் நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்களை, 'நான் முதல்வன் திட்டம்' என பொய் கூறி, தி.மு.க., கட்சி நிகழ்ச்சிக்கு வரும்படி, அந்த பகுதி தி.மு.க., கவுன்சிலரின் கணவர் வற்புறுத்தி இருக்கிறார்.
கட்டட வேலை செய்ய வைப்பது, கழிப்பறைகளை கழுவச் செய்வது, பள்ளியை சுத்தம் செய்வது என, அரசு பள்ளி மாணவர்களை, தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்தி வருகிறது தி.மு.க., அரசு. பல பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கூட இல்லை.
இந்நிலையில், தி.மு.க., நிகழ்ச்சிக்கு கூட்டம் சேர்க்க, அரசு பள்ளி மாணவர்களை பயன்படுத்த முயற்சிக்கும், தி.மு.க.,வின் அகங்கார செயல்பாட்டை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மணிமொழி
-
தினமும் இரவு வெடிகுண்டு சத்தம்; ஈரானில் படிக்கும் இந்திய மாணவர்கள் கதறல்
-
பெருவில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்!
-
முழு பதிலடி கொடுப்போம்; போர் நிறுத்த பேச்சுவார்த்தையை ஏற்க ஈரான் மறுப்பு
-
வார தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு; ஒரு சவரன் ரூ.74,440!
-
ரோடு ஷோவிலும், போட்டோஷூட்டிலும் மட்டுமே கவனம்: முதல்வரை சாடிய இ.பி.எஸ்.,!
Advertisement
Advertisement