வாகனம் மோதி புள்ளிமான் பலி

உசிலம்பட்டி: உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லுாரி அருகே நேற்று முன்தினம் இரவு ரோட்டை கடக்க முயன்ற 2 வயது புள்ளி மான் வாகனம் ஒன்று மோதி இறந்தது. மருத்துவ பரிசோதனையில் வயிற்றுப்பகுதியில் ரத்தம் உறைந்தும், ஒரு கால் முறிந்தும் இருப்பது தெரியவந்தது.
எச்சரிக்கை பலகை
சில வாரங்களுக்கு முன்பு வாலாந்துார் அருகே புத்துார் செல்வராஜ் 55, டூ வீலரில் சென்ற போது மான் திடீரென குதித்து ஓடியதால், நிலைத்தடுமாறி விழுந்து காயமுற்றார். இப்பகுதி மலைகளில் மான்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இவை மேய்ச்சலுக்காக வாலாந்துார் கண்மாய் உள்ளிட்ட சமவெளி பகுதிகளில் அதிகமாக நடமாடுகின்றன.
இப்பகுதி ரோட்டில் 'வனவிலங்குகளின் நடமாட்டம் உள்ள பகுதி, வாகனங்கள் கவனமாகச் செல்ல வேண்டும்' என்ற எச்சரிக்கை பலகை அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மணிமொழி
-
குடும்ப கட்டுப்பாடு செய்ததால் தமிழகத்திற்கு ஆபத்து: முதல்வர் ஸ்டாலின் பேச்சு
-
தினமும் இரவு வெடிகுண்டு சத்தம்; ஈரானில் படிக்கும் இந்திய மாணவர்கள் கதறல்
-
பெருவில் 6.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ஒருவர் பலி; 5 பேர் படுகாயம்!
-
முழு பதிலடி கொடுப்போம்; போர் நிறுத்த பேச்சுவார்த்தையை ஏற்க ஈரான் மறுப்பு
-
வார தொடக்கத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு; ஒரு சவரன் ரூ.74,440!
Advertisement
Advertisement