இ.கம்யூ., மாநாடு

மதுரை: மதுரை மேலமாசி வீதி மாநகராட்சி சமுதாய கூடத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மத்திய கிழக்குப் பகுதி சார்பில் நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, வீரமாகாளி, சோலை ஈஸ்வரி ஆகியோர் தலைமையில் மாநாடு நடந்தது.

மாவட்ட செயலாளர் முருகன், நிர்வாகிகள் நந்தாசிங், ராஜலட்சுமி, தாமஸ், வீரனசிங்கம் ஆகியோர் பேசினர்.

செயலாளராக சந்திரசேகர், உதவி செயலாளர்களாக வீரமாகாளி, சித்தநாதன், பொருளாளராக ஜெய்லானி உட்பட 13 பேர் கொண்ட புதிய பகுதிக் குழு தேர்வு செய்யப்பட்டது. பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement