அப்பா இறந்த சோகத்தில் மகனும் மரணம்

திருமங்கலம்:உசிலம்பட்டி அருகே தும்மகுண்டு பெருமாள் பட்டியைச் சேர்ந்த விவசாயி பால்சாமி. இவரது மகன் ராமையா. இவர் உத்தப்புரத்தில் ரேஷன் கடையில் வேலை செய்து வந்தார்.

நேற்று பால்சாமி உடல் நல குறைவால் இறந்தார்.

இதுகுறித்து அறிந்த ராமையா வீட்டிற்கு வந்து தந்தையின் உடலை பார்த்து கதறி அழுதார். அப்போது மயங்கி விழுந்தார்.

அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

Advertisement